சிங்கங்களுக்கு தல கைப்பு கடிதம்

கொஞ்ச நாளாச் சங்கத்தில் இருந்து எந்த அறிக்கையும் வராத காரணத்தால் கடுப்புக்களைக் கிளறிய படி அகமதா பாளையம் முக்கு சந்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்த கைப்பு சங்கத்தின் அலுவலகத்துக்குப் பத்து நாள் முன்னாடி அனுப்பிய பேக்ஸ்...பீட்டா பிளாக் மேட்டரைக் காரணம் காட்டி சங்கத்து பயல்கள் எல்லாரும் சொல்லாமக் கொள்ளமா அங்கிட்டும் இங்கிட்டும் புறப்பட்டு பொழ்ப்பைப் பாக்கப் போயிட்டதால இந்தா இப்போத் தான் நான், ஓங்க கில்லி பையன் பாக்குறேன்...

அதாவது வர்ற பிப்ரவரி 14 ஊருக்கே உவகைத் தரும் லவ்வர்ஸ் டே... அந்த நாள் தான் நம்ம கைப்பு வாழ்க்கையிலும் ஒரு மகத்தான் நாள்...

அந்த மகத்தான நாளை ஒவ்வொரு வருத்தப் படாத வாலிபனும் சிறப்பாக் கொண்டாடணும்ன்னு கேட்டுகிட்டு அவரே ஒரு கடிதம் எழுதியிருக்கார்...

தலச் சிங்கங்களுக்கு சவுண்டு கொடுத்து எழுதியிருக்கும் கடிதம், இந்தாக் கீழே சங்கப் பலகையிலே ஓட்டியாச்சுப் பாருங்க..

என்னைய மாதிரியே பொழப்பு அத்து, நாட்டுல்ல வீட்டுல்ல பொட்டித் தட்டுறேன்னு சொல்லிகிட்டு ஆபிஸ்ல்ல சம்பளம், கூட போனஸ், இன்னும் இதர அலவுன்ஸ் அம்புட்டையும் வாங்கிட்டு வேலை நேரத்துல்ல வெத்துத் தனமா பதிவு போட்டுகிட்டும் பதிவைப் படிச்சுகிட்டும்...பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுகிட்டும் திரியற அம்புட்டு மக்களுக்கும் இந்த கைப்புள்ளயின் குட் மார்னிங்...

கொஞ்ச நாளாப் சங்கம் பக்கம் வர முடியல்ல... இங்கிட்டு இருந்தே பாளையத்துல்ல பொழ்ப்பைப் பாத்துகிட்டே அங்கே நடக்குறதே பாக்கலாம்ன்னு மலேசியாவுல்ல ஒரு சந்தையிலே ஆட்டயப் போட்டு, சங்கத்து ஆபிஸ்ல்ல மாட்டி வச்சிருந்த சி.சி.டிவியை எந்த களவாணிப் பயலோ கமுக்கமாக் களவாண்டுட்டுப் போயிருக்கான்...

சரி ஒத்த போன் போட்டு விவரம் கேக்கலாம்ன்னு நினைச்சா... போன் கனெக்ஷனைப் புடுங்கி ஒரு பைய இடுப்பு அரைஞாண் கயிறாக் கட்டிட்டு ஊர் ஓரமாத் திரியறானான்... (இருடீ வந்து உனக்கு தனிக் கச்சேரி வைக்கிறேன்)..

அஞ்சு வயசு சின்னப் புள்ளல்ல இருந்து அறுபது பொக்கவா கிழ்வி வரைக்கும் பாத்துக் காறி துப்பன்னாலும் கொஞ்சம் கூடக் கலங்கமா பொறுக்கி சேர்த்த செங்கல் வச்சே கட்டுனச் சங்க கட்டடம்.. சிங்கமெல்லாம் சீறி சிலுப்பிகிட்டு திரிஞ்ச வரலாற்று வளாகத்துக்கு இப்போ கரண்ட் கனெக்ஷன் ஈவு இரக்கம் இல்லாம கட் பண்ணிட்டாங்களாம்..

ஆனாலும் நாங்க எல்லாம் யாரு?
வருத்தம்ன்னா என்னன்னுனே தெரியாத திமிங்கலக் கோஷ்ட்டி இல்ல...
கரண்ட் போனா என்ன??
சூரியனையே அட்லாஸ் வாலிபனா இறக்கி சங்கத்துக்கு லைட் போட்டுட்டோம் இல்ல....

கொஞ்சம் ஓவராப் பேசுறேனோ... சரி... வீரன் வாய்ன்னா பேசும் போது நாலு வீர வார்த்தைப் அப்படி இப்படி சிதறத் தானேச் செய்யும்....
வீரன் கையின்னா கீ போர்ட்ல்ல வீரம் விழைஞ்சு வானத்தை நோக்கி நெட்டி முறிக்கத் தானே செய்யும்....இதெல்லாம் கண்டுக்கப் பிடாது.... வீரன் வாழ்க்கையிலே ஜகஜம்...

அய்யோ அய்யோ நான் சொல்ல வந்த மேட்டர் என்னன்னு சொல்லவே இல்ல... கையிலே கரண்ட் பாஞ்ச மாதிரி அப்படியே வார்த்தையாக் கொட்டுதா கன்ட்ரோல் பண்ண முடியல்ல....

அதாவது.. ஆண்டிப்பட்டிங்கற ஊருல்ல அஞ்சாத அலங்கநல்லூர் மொரட்டுக் காளையாக் கலக்கிட்டு திரிஞ்ச இந்த கைப்புள்ளயின் வாழ்க்கையில் ஒரு மகத்தான திருப்பம் நடந்துச்சு...

ஆமாய்யா.. பிப்ரவரி 14.... அது வரைக்கும் எல்லாரையும் மாதிரி அடி உதைன்னா ஆறு மைலுக்கு அப்பால ஒடுற ஒரு சாதரண சல்லிப் பயலாத் தான் இந்த கைப்புள்ளயும் இருந்தான்...ஏன் பக்கத்து சீட் மொட்ட முருகேசன் கிள்ளுனாலே போதும் ரோசா மாதிரி அழுது அழுது முகம் சிவந்துப் போயிருவான் இந்த கைப்பு.. அப்படி இருந்த கைப்புள்ள இன்னிக்கு இடி இடிச்சாக் கூட திரும்பி பார்த்து லைட்டா ஸ்மைல் விடுற அளவுக்கு மாறியிருக்கேனா... அதுக்குக் காரணம் அந்த பிப்ரவரி 14....

அந்தப் பிப்ரவரி 14 என்ன நடந்துச்சுன்னா.......

பொங்கி வர்ற இளமையோட...வாலிப வயசு திமிர.. நெஞ்சு நிமிர ... உள்ளூர் அழகில்ல இருந்து மதுர மீனாட்சி கோயிலைச் சுத்திப் பாக்க வர்ற வெள்ளைக்கார அழகி வரைக்கும் எல்லாப் பொம்பளைப் புள்ளக மேலயும் கைப்புள்ள கண்ட படி காதல் வசப் பட்டுக் கொண்டிருந்த அது ஒரு கனாக் காலம்...

எல்லாரையும் காதலிச்சுகிட்டு இருக்கானே.. ஆனா தன்னை யாருமே திரும்பிக் கூடப் பாக்கலீயேங்கற வருத்தம் தம் பையனுக்கு கொஞ்சம் கூட இல்லையேன்னு எங்கப்பா கையப்பருக்கு ஒரே வருத்தம்..

ஓடனே ஊர் பஞ்சாயத்துக் கூடிச்சு... இன்னியும் நம்மூர்ல்ல பொண்டு புள்ளக பத்திரமா இருக்கணும்ன்னா இவனுக்குக் கட்டாயம் கலியாணம் பண்ணி வைக்கணும்ன்னு முடிவாச்சு... எனக்கு கலியாணம்ன்னு சொன்னதும் ஊரே சந்தோசமாயிருச்சு.. பொண்ணப் பெத்தவங்கப் பூராப் பேரும் கோயிலுக்கு கிடா வெட்டு...108 சிதறு தேங்கான்னு சிதற விட்டு சீட்டியடிச்சாங்க...கிழவிகக் கூட கம்பை ஊனிகிட்டு கோயிலுக்குப் போய கடவுளுக்கு டாங்க்ஸ் சொன்னாய்ங்கன்னாப் பாத்துக்கங்க...

இங்கேனத் தான் வினை தோகைய விரிச்சு ஆடுச்சு.. நம்ம யோக்கியதைக்கு உள்ளுர்ல்ல எந்த அப்பனும் தன் பொண்ணைத் தர மாட்டேன்னு சொல்லிட்டான்... அசலூர்ல்ல அந்தப் பக்கம் தேனி வரைக்கும் இந்தப் பக்கம் திருச்சி வரைக்கும் சான்சே இல்லன்னு ஆகிப் போச்சு...

கைப்புள்ள கலங்கவே இல்ல... அப்பாத் தான் பாவம் கவுந்துப் படுத்துக் கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டார்...இந்த சமயத்துல்ல தான் கொட்டாம்பட்டியிலே இருந்து ஒரு வரன் வந்துச்சு.. பாவம் யாரோ ஒரு ஒருத்தர் வாழ்க்கையிலே கொஞ்சம் பொழுதுபோக்கா வாழ்ந்து இருப்பார் போல எட்டும் பொண்ணாப் பொறந்துருச்சாம்.. நான் எவ்வளவு பெரிய முடிச்சவிக்கியா இருந்தாலும் பரவாயில்ல எனக்குப் பொண்ணுத் தர்றேன்னுச் சொல்லிட்டாராம்..

என்னோட இயற்கை அழகுக்கு இன்னும் அழ்குச் சேர்த்துக்கிட்டு என்னோட வாகனத்துல்ல நம்ம பயல்வ புடைச் சூழ பொண்ணுப் பாக்க கிளம்புனேன்...
அங்கே பலமாத் தான் வ்ரவேத்து காபி டிபன் எல்லாம் நல்லாவேக் கொடுத்தாயங்க... நானும் நம்ம சிங்கங்களும் நல்லாச் சாப்பிட்டோம்...

பொண்ணு பிடிச்சிருக்கான்னு எங்கப்பாக் கேட்டார்...

கைப்புள்ள மனசுல்ல காதல் பொங்கி வழிஞ்சு ஓட ஆரம்பிச்சுருச்சு...வெள்ளைக்காரன் ஸ்டைல்ல எழுந்துப் போய் பொண்ணைக் கட்டிப் பிடிச்சு ஒரு லிப் டூ லிப் கிஸ் அடிச்சு ஹே ஐ லவ் யூன்னு சொன்னேன்..

அவ்வளவு தான் ஒரு ஏழெட்டு எருமை மாடு எம் மேல குறுக்கும் நெடுக்கும்... குறுக்கும் நெடுக்குமா ஓடிக்கிட்டே இருக்க மாதிரி இருந்துச்சு... எனக்குப் பொண்ணு தர்றேன்னு சொன்னவன் என் வாயிலே மூணு குத்து....ஓடி, ஓடி வந்து குத்துனான்

ஒட்டு மொத்தமா லைட்டை எல்லாம் அணைச்ச மாதிரி ஒரே இருட்டு...முழிச்சுப் பாக்குறேன்.. ஜட்டி மட்டும் போட்டு கையைக் காலை எல்லாம் கட்டி வச்சு சின்னப் பிள்ளைய எல்லாம் விட்டு அடிக்க விட்டாயங்க,....

டேய்.. என்னடா இது.. கட்டிக்கப் போற புள்ளக்கு உம்மா கொடுத்தாத் தப்பாடா..ஏன்டா இப்படி கொலைவெறியில்ல பிச்சுப் புடுங்குறீங்கன்னு கேட்டேப்புட்டேன்...

"டேய் வெக்கங்கெட்ட வென்று.. நீ முத்தம் கொடுத்தது பொண்ணுக்கு இல்லடா என் பொண்டாட்டிக்குடான்னு " எனக்கு மாமனார் ஆகியிருக்க வேண்டியவர் கத்திகிட்டே குறி பார்த்து ஒரு கல்லை வச்சு என் வாயிலேயே அடிச்சான்...

"என்னது உங்க பொண்டாட்டியா.. உன் பொழுதுபோக்குக்கு இப்போத் தெரியுதுடா காரணம்" அப்படின்னு சொல்லும் போதே மறுபடியும் எனக்கு ப்யூஸ் போயிடுச்சு..

அதுக்குப் பொறவு கின்னஸ் அப்படின்னு ஒரு புக்ல்லருந்து என்னியப் பேட்டி எடுக்க வந்தாய்ங்க.. ஓலகத்தில்லேயே இந்த அளவுக்கு அடி,குத்து, மிதி ,உதைன்னு வாங்கி யாரும் கெத்தாத் திரும்ப நின்னது இல்லயாம்.. அடி..குத்து எல்லாம் சேத்து லட்சத்துல்ல கணக்குச் சொன்னாய்ங்க...

இது நடந்துக்குப் பிறகு எங்க ஊர் வாலிப மக்க எல்லாம் சேர்ந்து அந்த நாளை அதான் பிப்ரவரி 14ஐ பெரிய திருவிழாவாக் கொண்டாடா ஆரம்பிச்சாங்க... பட்டணத்துப் பக்கம் வேலன்ட்ன்ஸ் டேன்னு ஒரே வெளம்பரமாக் கொண்டாடுறாயங்க...

இந்த வருசம் பிப்ரவ்ரி 14 எல்லாரும் சங்கத்துக்கு வாங்க புதுசாப் பெயிண்ட் அடிச்ச பளபளன்னு அசத்தலாக் கொண்டாடிருவோம்....

இப்படிக்கு

தல கைப்புள்ள..
அகமதா பாளையம் ஜில்லா

தல கடிதம் இதோ சங்க போர்ட்ல்ல ஓட்டியாச்சு என் வேலை முடிஞ்சது.. நேரமாச்சு.. வர்றட்டானு சொல்லி எகிறுவது சல்லி பையனைச் சொல்லி அடிக்கும் கில்லி பையன்..

இப்போ இன்னா இன்றே நீ?

தமிழ் அருஞ்சொற்பொருள் விளக்கக் கையேடு

அல்வா - To cheat

ஆத்தா - Mother

அபேஸ் - Loot adiththal

அல்பம் - A silly/cheap dude

அண்ணாத்தே - The elder brother

அண்ணி - Anna's figure

அப்பீட்டு - Unsuccessful

அசத்தல் - Kalakkal

பஜாரி - A not-so-friendly figure

பந்தா - Pillim

பேக்கு - Fool

பாடி - Muscular Machi

சித்தீ - Aunty Figure

டப்ஸா/டூப் - Lie

தேசி குஜிலி - An Indian figure in US

தில் - Courage

தூள் - Super

தம் - To smoke

டாவு - Site seeing

டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)

டமாரம் - Deaf

டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl

ப்ரீயா வுடு மாமே - Forget it

காலி - Appeettu

குஜிலி - Figure

குரு/தல - Head of the gang

குஜால்ஸ் - Having fun with Gujilis

கானா - Rap song sung by Machis

கலீஜ் - Dirty

கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from

ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)

ஜொள்ளு - Bird watching

ஜில்பான்ஸ் - Gujaals

ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.

ஜுஜிபி - Easy

ஜில் - An exclamation on seeing a Takkar figure

ஜல்சா - Same as Gujaals

காட்டான் - Uncivilized/ Rude Machi

கேணை - Idiot

கிக்கு / மப்பு -Intoxicated/under influence

கலக்கல்ஸ் - To cause a flutter

கேணை பக்கிரி - Friend of ushar pakri

கிண்டல் - To make Fun

காக்கா அடிக்கிறது - Putting soaps to someone

கே.எம்.எல். - Kedacha Mattum Labam

குட்டி - Figure

குடும்ப பிகர் - Homeloving Gujli

குடும்ப பாட்டு - A song with which machis identify themselves

குள்ளுஸ் - A short machi

லட்டு - Allva

லூட்டு -to steal

மாம்ஸ் - One cool dude

மாங்காய் - Fool

மச்சி - Maams

மண்டை - A sharp guy

மேரி - feminine of Peter

மாவு - refer O B.

நச்சுன்னு - Bull's eye

நம்பிட்டேன் - I don't believe you

நாட்டு கட்டை - A well-built village figure

நாட்டான் - Villager

நாமம் - To cheat

நைனா - Father (courtesy Telugu)

கடலை - Machi talking to a Gujili or vice versa

ஓபி - To waste time

ஒண்ணரை அணா - Worthless

பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli

பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in

ஹை-பி - english

பத்தினி - A figure who goes around the block

பக்கிரி - A shrewd dude

பேட்டை - Area

பிசாத்து - Cheap

பிலிம் - Show-off

பீலா - To lie

ராம்போ - A manly figure

சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time

சொங்கி - Lazy

சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick (courtesy Movie:Thevar Magan)

டக்கர் பிகர் - Semma figure

தண்ணி - Liquor

தலைவர் - Leader

டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)

உஷார் பக்கிரி - Smart pakri

வெண்ணை - Fruit

வெயிட் பிகர் - A very attractive/rich figure

ராங்கு காட்டுறது -Acting indifferently

செந்தழல் வீராச்சாமி!


ஒரு குட் நியூஸ்!

கிங்காங் படத்தை தமிழில் ரீமேக் பண்ணியிருக்காங்க!

பார்க்க மறந்துடாதீங்க!

அடுத்த மாசம் ரிலீஸ்....

என்ன படத்தோட பேருதான் மாறிடுச்சி...

சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்கும்
"வீராச்சாமி"

- இப்பதிவு "வீராச்சாமி" திரைப்படக் காவியத்துக்கு விமர்சனம் எழுதிய செந்தழலாருக்கு சமர்ப்பணம்.

படம் உதவி : செந்தழலார் கொலைப்படை

மன்னா? என்னா?























மன்னா ஜோக்ஸ்

*******************

மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா.

புலவர் : அய்யகோ மன்னா... கி.கி.


சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......

*******************

அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....

மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....

*******************

மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது.

மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு.

*******************

அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....

மன்னர் : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்....

*******************

மன்னர்: எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?

மந்திரி: எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.


*******************

மன்னன்: மந்திரியரே... தளபதி எங்கே ?..

மந்திரி: பக்கத்து நாட்டில் தளபதி போஸ்டிங் காலியா இருக்குன்னு... இண்ட்ர்வியு போயிருக்காரு....

*******************

மன்னர்: யாரங்கே?

சிப்பாய்: பேர் கூட தெரியாத நீயெல்லாம் ஒரு ராஜா.

*******************

மன்னர் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மந்திரி: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ýட்டான்.

மன்னர்: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

மந்திரி: அதைத்தான் சொல்லிட்டான்...!

*******************

அமைச்சர் : மன்னரே புறா மூலம் கடிதம் எழுதிய பக்கத்து நாட்டு மன்னனுக்கு என்னவென்று Acknowledgement அனுப்புவது?

மன்னர் : புறாக்கறி சூப்பர் என்று அனுப்பு.....

*******************

அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?

மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?

அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....


:-)))))))))))))))))))))))))))))

குரு – திரை விமர்சனம்



மவுனராகம், அக்னிநட்சத்திரம், இதயத்தைத் திருடாதே படங்களில் மணிரத்னத்துக்கு இருந்த அதே இளமை பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் மணிரத்னத்துக்கு இன்னமும் இருக்கிறது. குரு படம் ஒரு தொழிலதிபரின் வெற்றியை பறைசாற்றும் படம் என்றாலும் படம் முழுக்க இளமை தெளித்துவிடப்பட்டிருக்கிறது.

துருக்கியில் பணியாற்றும் கதாநாயகன் பெல்லி டான்ஸர்களுடன் ஆட்டம் போடுவதில் ஆகட்டும். கிராமத்து அழகுப் புயல் ஐஸ்வர்யா ராய் அருவியில் ஆட்டம் போடுவதில் ஆகட்டும் இளமை… இளமை… எங்கும் இளமை…..

மும்பையில் புதுமனைவியோடு அபிஷேக் நடத்தும் குடித்தனம் இளமைச் சுனாமி. தினமும் காலையில் வேலைக்குச் செல்பவர் வீட்டை விட்டு இறங்கியவுடன் (வேண்டுமென்றே) பர்ஸை மறந்து வைத்து விட்டு, திரும்பவும் வீட்டுக்கு வந்து Noon Show காட்டுகிறார். இந்த மாதிரி தினமும் காலையில் வேலைக்குச் செல்லும்போது பர்ஸையோ, பைக் கீயையோ அல்லது கர்ச்சீப்பையையோ மறந்து விட்டுச் செல்லும் ஒரு நபரை எனக்கு ரொம்ப நெருக்கமாகவே தெரியும் 

படம் முழுக்க ஐஸ்வர்யா ராயை கொஞ்சிக்கொண்டே இருக்கிறார் குரு. கொஞ்சும்போது கூட அவரது தொழில் புத்தி மாறுவதில்லை. துணி வியாபாரம் செய்யும் குரு தன் மனைவியை “சீமை சில்க் மாதிரி இருக்கேடி” என்று தான் கொஞ்சுகிறார். உலக அழகி மனைவியாக வந்தால் யாருமே இதுபோல கொஞ்சிக் கொண்டு தான் இருப்பார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு நாளாக நாளாக இடை மெலிந்து கொடியை விட ஒல்லியாகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதே 50 கிலோ தான் என்று வைரமுத்து சொல்கிறார்.

பத்திரிகையாளராக வரும் மாதவனுக்கு காதலி வித்யாபாலன். படத்தின் வசனங்களும் ரொம்ப இளமை. வித்யா பாலன் பேசும் “மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா….” வசனம் சூப்பர். மாதவன் தன் காதலை வித்யாபாலனிடம் தெரிவித்து விட்டு அடிக்கிறார் பாருங்கள் ஒரு பிரெஞ்சு கிஸ்….. யப்பா….. செம சூடு…. ஆங்கிலப் படங்களில் கூட இவ்வளவு சூடான கிஸ்ஸைக் கண்டிருப்போமா என்பது சந்தேகமே…. கமல்ஹாசனுக்கு அடுத்த வாரிசு ரெடி.

குருபாய் பெரிய தொழிலதிபர் ஆனதும் தான் சிறுவயதில் மனைவியோடு குடும்பம் நடத்திய வீட்டுக்கு வந்தபின்பு வரும் ஒரு சில பிளாஷ்பேக் கிளிப்புகள் அருமை. மச்சினனின் தொல்லை தாங்காமல் மனைவியோடு ரகசியமாக குரு சரஸமாடும் காட்சிகளில் பின்னணி இசை, கேமிரா, வசனங்கள் என்று செம கூட்டணி.

பிகரோடு ஜாலியாகப் பார்க்க ஏற்றப் படம் குரு.

இப்படத்தின் வேறு கோணத்து விமர்சனத்தை இங்கே பாருங்கள்.

பெண்களோ, பெண்கள்!

பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு.

பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன் நண்பர்களுடன் சியர்ஸ் சொல்லி பொங்கல் கொண்டாடுகிறோம்.

போகி அன்றும் எங்களது “திருவிளையாடல்” தொடரும். பஞ்சர் சிவா கடையில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய பழைய சைக்கிள் டயர்களுடன் போகி கொண்டாடுவது எங்கள் வழக்கம். அட்வென்ச்சரில் ஆர்வம் கொண்ட சில வாலிபர்கள் அந்த டயரின் ஒரு புறத்தை கொளுத்தி விட்டு அப்படியே ஒரு குச்சியால் எரிந்த டயரை ஓட்டிக் கொண்டு தெருவை வலம் வருவது வழக்கம். கோலம் போடும் பிகர்களின் கவனத்தைக் கவர இதுமாதிரியான அட்வென்ச்சர்ஸ் அவசியம். சில ஆண்டுகளாக காவல்துறையினர் இந்த விளையாட்டுக்குத் தடை போட்டு எங்களது வாலிப வேகத்தை தடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

போகி அன்று “மோளம்” அடித்துக் கொண்டே தெருவை வலம்வரும்போது நாம் வெட்டும் பிகரின் வீட்டின் எதிரில் நின்று “போகி போச்சி, பொங்கலும் போச்சி, பொண்ணு தாடா மாமோய்” என்று கோரஸாக கூச்சலிட்டு வருங்கால மாமனாரை கலாய்ப்பதும் உண்டு.

ஏதோ கிராமத்து இளைஞர்களுக்கு மட்டுமே வீரம் உண்டு. ஜல்லிக்கட்டில் தினவெடுத்த தோள்களுடன் பயமில்லாமல் முட்டும் மாட்டை அடக்குகிறார்கள் என்ற மாயத்தோற்றம் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. பொங்கலுக்கு 15 நாள் முன்பே எங்களது “ஜல்லிக்கட்டு” ஆரம்பமாகிவிடுகிறது. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கே அசுரவேகத்தில், புல் மப்புடன் கொலைவெறியுடன் சொந்த பைக்கிலோ அல்லது ஓசி பைக்கிலோ பயணித்து எங்கேயாவது வீரத்துடன் முட்டிக் கொண்டு சாவது என்பதை எங்கள் பண்பாடாகவே வைத்திருக்கிறோம்.

இவ்வாறாக பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும் கொண்டாடும் நாங்கள் காணும்பொங்கலை மட்டும் விட்டுவிடுவோமா? மார்கழி மாதம் முழுவதுமே எங்களுக்கு காணும் பொங்கல் தான். அதிகாலை 4 மணிக்கே எழுந்து, கிடுகிடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்து, பட்டை அடித்து, அப்பா பாக்கெட்டிலிருந்து அம்பதோ, நூறோ லவட்டி தெருவலம் செல்வது வழக்கம். அப்போது தான் 5.30 மணிக்கு மார்கழிமாத கோலம் போட வரும் நைட்டி நந்தினியையும், மிடி மீனாட்சியையும் அதிகாலையிலேயே சந்திக்க முடியும். பிகர்களை மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் பர்சனாலிட்டியில் மீட் செய்ய முடிவது இந்த காணும் பொங்கலில் மட்டுமே சாத்தியம்.

அதற்குப் பின்பாக குளிருக்கு இதமாக ஒரு கிங்ஸ் வாங்கி 4 பேர் ஷேர் செய்துக் கொண்டு பயபக்தியுடன் அருகிலிருக்கும் ஏதாவது கோயிலுக்குச் சென்றால் சில வயோதிகர்கள் ஏதோ மார்கழி பஜனை செய்து வெண்பொங்கலோ அல்லது சுண்டலோ தருவார்கள். மார்கழி மாதம் முழுவதுமே அப்பாவின் தண்டச்சோறு திட்டு இல்லாமல் கோயில்களில் எங்களுக்கு ராஜமரியாதையுடன் “டிபன்” தருகிறார்கள்.

காணும் பொங்கல் ஸ்பெஷலாக பிகர் வெட்ட அரசாங்கம் சிறப்பு அனுமதியாக சுற்றுலாப் பொருட்காட்சி நடத்துவதை சென்னையின் வாலிபச் சிங்கங்கள் நன்றியுடன் வருடாவருடம் நினைத்துப் பார்ப்போம். சுற்றுலாப் பொருட்காட்சி மட்டுமா? கடற்கரையில் காணும்பொங்கல் அன்று வங்காள விரிகுடாவில் அடிக்கும் அலை எங்களது ஜொள் அலையே. சித்தாள் பிகரிலிருந்து சாப்ட்வேர் பிகர் வரை ஒரே இடத்தில் காணவேண்டுமா? சென்னைக்கு ஜனவரி 17 அன்று வாருங்கள். கடற்கரையில் பிகர்களுக்கு பிலிம் காட்டுவதற்காக நீச்சல் தெரியாவிட்டாலும் கடலில் குதித்து வீரத்துடன் உயிர்த்தியாகம் செய்யும் வாலிபர்களை சென்னையில் மட்டுமே காணுவது சாத்தியம்.

பிகர் கிடைக்காமல் அவதிப்படும் வாலிபர்களுக்கு வரப்பிரசாதம் இந்த காணும் பொங்கலே. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கோ அல்லது கிண்டி சிறுவர் பூங்காவுக்கோ சென்றால் அவரவர் பர்சனாலிட்டிக்கேற்ப தக்க எக்ஸ்போர்ட் பிகரையும் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் பிகர்) கரெக்டு செய்ய முடியும். ஏற்கனவே பிகரை ரைட்டு செய்து வைத்திருக்கும் புண்ணியவான்களும் பிகர்களோடு கோவளம், மகாபலிபுரம் என்று ரவுண்டு கட்டி கொண்டாடும் வழக்கமும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்து விரைவில் வரும் காதலர் தினத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய பொங்கல் விடுமுறை சென்னை இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சரி, சங்கத்து சிங்கங்களெல்லாம் பொங்கல் கொண்டாடுவோம். எங்கே கோஷம் போடுங்கள் பார்ப்போம்....

"பெண்களோ பெண்கள்"

ஜுனியர் ஃபார்மருக்கு வாழ்த்துகள்

இன்று(12.01.2007) தன்னுடைய முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் சங்கத்தின் இளைய சிங்கம் ஜுனியர் விவசாயி மாஸ்டர்.ஷெர்வின், எல்லா வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.


எங்களோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள்.